search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் வாக்குவாதம்"

    • கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • பாதியிலேயே திரும்பி சென்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பையூர் ஊராட்சியில், புதிய காலனி பால்வாடி தெருவில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டது.

    புதிதாக அமைக்கப்பட்ட தரற்ற முறையில் இருப்பதாகவும், கல்வெட்டு பாலத்தின் வழியாக கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படவில்லையாம். இதனால் அந்த பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று புதியதாக கட்டப்பட்ட கால்வாய் பணியை பார்வையிட அதிகாரிகள் பையூருக்கு வந்தனர்.

    திடீரென்று பொதுமக்கள் திரண்டு சென்று அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும், கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் காலரா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கல்வெட்டு பாலத்தில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யாமலேயே பணி முடிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிகாரிகள் ஆய்வுப் பணியை முழுமையாக செய்யாமல் பாதியிலேயே திரும்பி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாகமருதாண்டப்பள்ளி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்து உள்ளது.

    இந்த பங்கில் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கம்.இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் வாகனம் இயங்காமல் அவதிபட்டனர்.

    இந்நிலையில் வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில் மழை நீர் பெட்ரோல் கிடங்கில் இறங்கி உள்ளது தெரிய வந்தது.

    இதனால் பெட்ரோல் போட்டவர்களின் வாகனங்கள் இயங்காததால் பங்கை 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.  

    • தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.
    • 40க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி, மாவட்டம், ஏரியூர் அருகில் உள்ள, தருமபுரி,- சேலம் மாவட்ட எல்லையை கடந்து செல்ல, மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடக்க வேண்டி உள்ளது.

    இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை கடந்து செல்வதற்காக, ஒட்டனூர்- கோட்டையூர் இடையே ஒரு பரிசல் துறையும், நாகமரை- பண்ணவாடி இடையே மற்றொரு பரிசல் துறையும் உள்ளது.

    இதை பயன்படுத்தி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும், சேலம் மாவட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். மேலும் விவசாய பயிர்களையும், சேலம் மாவட்ட வார சந்தைகளுக்கு, கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதற்காக பரிசல் பயண கட்டணம், தனிநபருக்கு 5 ரூபாய் எனவும், இருசக்கர வாகனத்திற்கு 10 ரூபாய் எனவும் இருந்தது.

    இது கடந்த 3 ஆண்டுகளில், படிப்படியாக உயர்ந்து, தற்போது தனி நபருக்கு ரூ.20 எனவும், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.40 எனவும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் புதிய டெண்டர் விடப்பட்டது. இதில் டெண்டர் எடுத்தவர்கள் 50 லட்சத்திற்கும் மேல் ஏலம் போனதால், கட்டுபடியாகாது என மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, கூடுதல் கட்டணத்திற்கு அனுமதி வாங்கியுள்ளனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமல், பரிசல் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக, 100 மடங்கு கட்டண உயர்வை மேற்கொண்டு உள்ளனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இத்தகைய கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்கள் ஏரியூர் போலீஸ் நிலையம் மற்றும் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    மேலும் 40க்கும் மேற்பட்ட இப்பகுதி பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர். அப்போது ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா கூறும்போது, ரூ. 50 லட்சத்திற்கு மேல் டெண்டர் எடுத்தவர்கள், குறைவான கட்டணம் வசூலித்தால் கட்டுப்படியாகாது என தெரிவித்தனர், எனவே கட்டண உயர்வை மேற்கொண்டோம் என்றார். இதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து உடனடி கட்டண குறைப்பு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் சாலை மறியல் செய்யப் போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
    • சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும் என புகார்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம் சேட் நகர் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    பொதுமக்கள் எதிர்ப்பு

    ராம் சேட் நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை ஆஸ்பத்திரி கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இங்கு கால்நடை ஆஸ்பத்திரி கட்டுவதால் ஏராளமான கால்நடைகள் இங்கு கட்டுவார்கள்.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியாகும். இப்பகுதியில் கால்நடை ஆஸ்பத்திரி கட்டக்கூடாது.

    புறநகர் பகுதியில் வேறு எங்காவது கட்ட வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரி கட்ட வேறு இடம் காண்பிப்பதாக பொது மக்கள் அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

    அப்போது அதிகாரிகள் பொதுமக்களிடம் ஆஸ்பத்திரி கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் அவர்கள் முடிவின்படியே ஆஸ்பத்திரி கட்டப்படும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×